அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உருக்கம்....

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு பிராணி உயிரிழந்ததை அவர் அவரது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உருக்கம்....

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு பிராணி உயிரிழந்ததை அவர் அவரது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் ஜோ பைடன் பொறுப்பேற்ற பின், வெள்ளை மாளிகைக்கு தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். தன் செல்லப் பிராணிகளான, 'மேஜர் மற்றும் சாம்ப்' என்ற இரண்டு 'ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களையும், அவர் வெள்ளை மாளிகையில் வைத்து வளர்த்து வந்தார். அதில் சாம்ப் என்ற நாய், நேற்று முன்தினம் உயிரிழந்தது. இதை அதிபர் ஜோ பைடன், தன் அதிகாரப்பூர்வ 'டிவிட்டர்' பக்கம் வாயிலாக இதனை தெரிவித்தார். 

அதில் அவர், எங்கள் குடும்பத்தின் செல்லப் பிராணிகளான இரண்டு நாய்களில், சாம்ப் என்ற நாய், வீட்டில் உயிரிழந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக, சாம்ப் எங்களின் துணையாக இருந்து வந்தது. மகிழ்ச்சியான தருணங்களிலும், கவலையான நேரங்களிலும் எங்களுடன் சாம்ப் என்றும் இருந்தது என டிவிட்டரில் அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.