கூடையில் வைத்து மீட்கப்பட்ட ஒரு மாத குழந்தை ...

வெள்ள பாதிப்பில் இருந்து ஒரு மாத குழந்தையை பாதுகாப்பாக கூடையில் வைத்து காப்பாற்றியுள்ளனர்.

கூடையில் வைத்து மீட்கப்பட்ட ஒரு மாத குழந்தை ...

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியை சூப்பர் ராய் புயல் கடுமையாகத் தாக்கியுள்ளது. புயல் தாக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு துறையினர் மீட்டு வருகின்றனர். இந்த பேரிடரின் போது ஒரு மாத குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையினை மீட்பு துறையினர் பாதுகாப்பான முறையில் அங்கிருந்த கூடை ஒன்றை வைத்து பத்திரமாக மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்குழந்தையை மீட்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சிலர் வலைதள பக்கங்களில் விட்டுள்ளனர். அதில் கூடையினை ஓடம் போல பயன்படுத்தி குழந்தையை காப்பாற்றிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

மிண்டனாவில் 195 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயலால் கனமழை மற்றும் வெள்ளத்தால் அப்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.மேலும் இந்த புயலால் சுமார் 1.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.