ஜாமீன் கோரும் மெகுல் சோக்சி... டொமினிகா நீதிமன்றத்தில் மனு..
ஜாமீன் கோரி மெகுல் சோக்சி டொமினிகா நீதிமன்றத்தில் மனு

முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருவதாக ஜப்பான் ஒசாகாவில் நடைபெற்று வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு 2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றடைந்தார். தொடர்ந்து ஜப்பானின் கான்சாய் விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிலையில் ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பானின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, திருப்போரூர் டைசல் நிறுவன தயாரிப்பு தொழிற்சாலையை 83 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஒசாகாவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளவும், சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்த அவர், முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருவதாகவும் கூறினார். மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்வில், ஒசாகா துணை ஆளுநர் நோபுஹியோ யமாகுஜியை மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க
முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருவதாக ஜப்பான் ஒசாகாவில் நடைபெற்று வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு 2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றடைந்தார். தொடர்ந்து ஜப்பானின் கான்சாய் விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி உள்ளிட்டோர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பானின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, திருப்போரூர் டைசல் நிறுவன தயாரிப்பு தொழிற்சாலையை 83 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க : கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகத்தை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!
இதைத்தொடர்ந்து ஒசாகாவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளவும், சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருவதாகவும் கூறினார். மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்வில், ஒசாகா துணை ஆளுநர் நோபுஹியோ யமாகுஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக நேற்று சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகத்தை முதலமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
அப்போது பேசிய சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.
சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு விமான நிலையம் திரும்பும் வழியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள முருகன் இட்லி கடையில் தேனீர் அருந்தி தமிழ் மக்களுடன் கலந்துரையாடினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது அங்கு பணியாற்றிய ஊழியர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
முன்னதாக, முதலமைச்சர் வெளியிட்ட டிவிட்டர் பதவில் தமிழ்ப் போற்றும் சிங்கை வாழ் தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பனை சந்தித்ததாகவும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன் - முதல் பாகம்' நூலினை வழங்கி, அவரை வரவேற்றுப் போற்றியதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப் போற்றும் சிங்கை வாழ் தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்களை இன்று சந்தித்தேன். என்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன் - முதல் பாகம்' நூலினை வழங்கி, அவரை வரவேற்றுப் போற்றினேன்.
— M.K.Stalin (@mkstalin) May 25, 2023
தமிழும் தமிழர் நலமும் காக்கும் நமது அரசின் பணிகளைப் பாராட்டினார். தமிழ்ப்… pic.twitter.com/zsaoQItAFG
தமிழும் தமிழர் நலமும் காக்கும் திமுக அரசின் பணிகளை அவர் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்ப் பண்பாட்டை உலகுக்குக் காட்சிப்படுத்தும் கீழடி அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், பொருநை அருங்காட்சியகமும் சிறப்புற அமைந்திட வாழ்த்தினார் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:புகார் எழாத வகையில் மின் கணக்கீடு செய்ய உத்தரவு!
"சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் சென்னையில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்களின் மாநாட்டிற்கு பன்னாட்டு கம்பனிகளை சேர்ந்த தொழிலதிபர்களக்கு அழைப்பு விடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார். இதற்காக நேற்று சிங்கப்பூர் சென்ற முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மகிழ்ந்த முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் சிங்கப்பூர் தமிழர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்தி பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பதிவில், சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன், நெஞ்சம் நெகிழ்ந்தேன் எனவும், தமிழும், தமிழ் பண்பாடும் காத்து வாழும் சிங்கப்பூா் வாழ் தமிழா்களோடு அன்னை நிலமான தமிழ்நாட்டின் அன்போடு உரையாற்றியதாக குறிப்பிட்டுள்ளாா். மேலும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனையும், உரிமைகளையும் காக்க திமுகவும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை ஆழப்பதிந்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன்!
— M.K.Stalin (@mkstalin) May 24, 2023
தமிழும் தமிழ்ப் பண்பாடும் காத்து வாழும் அவர்களின் அன்னை நிலமான தமிழ்நாட்டின் அன்போடு அவர்களிடையே உரையாற்றினேன்.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் காக்க திராவிட முன்னேற்றக் கழகமும்… pic.twitter.com/tGxESeZALI
இதையும் படிக்க:"வன திருத்த மசோதா, மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை" உயர்நீதிமன்றம்!
அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் அதிபர்களை சந்தித்து பேசியுள்ளார். புதிய தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார்.
நீண்டகால உறவு:
சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் அதிபர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களது உரையாடலின் முக்கிய சாராம்சங்களை தெரிவித்துள்ளார். அதாவது, சிங்கப்பூரின் முக்கிய நிதி மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் உற்பத்தி ஈடுபாடு இருந்தது எனவும் டெமாசெக்கின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தில்ஹான் பிள்ளை சாண்ட்ரசேகரா, செம்ப்கார்ப் நிறுவனத்தின் கிம் யின் வோங் மற்றும் கேபிட்டலேண்டின் சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோருடனான பேச்சுக்கள் தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையேயான நீண்டகால உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது எனக் கூறினார்.
டிரில்லியன் டாலர் பொருளாதாரம்:
மேலும் அவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதிலும், டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய நமது பயணத்தில் எங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதிலும் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர் எனவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்துறை பூங்காக்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றில் தற்போதுள்ள முதலீடுகளை உணவு பதப்படுத்துதல் மற்றும் மீன்பிடித்தல் போன்ற புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்தோம் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையே வரலாற்று மற்றும் பரஸ்பர கூட்டமைப்பை மேலும் கட்டியெழுப்பவும் தொடரவும் எதிர்நோக்குவதாகவும் முதலமைச்சர் கூறினார்.
இதையும் படிக்க: பிரதமர் மோடியை சுற்றி வளைத்த எதிர்க்கட்சிகள்... கைகோர்த்ததா திமுக...!!