இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மெகுல் சோக்சி, ஆன்டிகுவாவிலிருந்து ரா உளவு அமைப்பை சேர்ந்த குர்மித் சிங் மற்றும் குர்ஜித் பண்டால் ஆகிய 2 அதிகாரிகள் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக கூறியுள்ளார். அவர்கள் தங்களை ரா அதிகாரிகள் என அடையாளப்படுத்திக் கொண்டதாக கூறிய அவர், விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.