மெக்காஃபி நிறுவனர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை..!!!

அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து, வைரஸ் தடுப்பு மென்பொருளின் முன்னேடியான  மெக்காஃபி நிறுவனர் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெக்காஃபி நிறுவனர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை..!!!

இவர், கிரிப்டோகரன்சி மோசடி, வரி ஏய்ப்பு போன்ற வழக்குகளில் அமெரிக்கா அரசால் தேடப்பட்டு வந்த நிலையில் அங்கிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் பார்சிலோனா விமான நிலையத்தில் மெக்காஃபி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜான் மெக்காஃபியை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு ஸ்பெயின் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்காவிடம் ஜான் மெக்காஃபியை ஒப்படைக்க ஸ்பெயின் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில்,  ஜான் மெக்காஃபி ஸ்பெயின் சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து ஸ்பெயின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.