இனிப்பு வழங்கியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி...

நாடளுமன்றத்தில் சக எம்.பி.க்களுக்கு இனிப்பு வழங்கிய எம்.பியை இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இனிப்பு வழங்கியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி...

கென்யா நாட்டில் நாடளுமன்றத்தில் நேற்று முந்தினம் ஒரு சர்ச்சைக்குரிய விவதாம் நடைபெற்று உள்ளது.இதில் பாத்திமா என்ற எம்.பி ஆனவர்  சக எம்பிகளுக்குக்கு இனிப்பு வழங்கியுள்ளார்.இது சர்ச்சையாக தொடங்கிய நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தபோது, “நீண்டதொரு விவாதம் நடந்ததால் எம்.பி.க்களின் சர்க்கரை அளவு குறைந்து விட்டது. எனவேதான் நான் சக எம்.பி.க்களுக்கு இனிப்பு வழங்கினேன்” என கூறினார்.

ஆனால் இதை ஏற்காத சபாநாயகர் அவரை ஒரு நாள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதே பெண் எம்.பி. தனது வீட்டின் மாடியில் லஞ்சத்தை பணமாக வினியோகித்தார் என்று சக எம்.பி. என்திண்டி நியோரோ குற்றம் சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் அவரால் அதை நிரூபிக்க முடியாமல் போய்விட்டது. இதற்காக அவர் 2 நாள் இடைநீக்கம் செய்யப்பட்டார். இது கென்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.