டிரோன்களை பயன்படுத்த தடை - அரசு அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி தனியார் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் டிரோன்களை பயன்படுத்த தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சில நாட்களுக்கு முன்னதாக ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாலர்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பத்தை அடிப்படையாக கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி தனியார் நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் டிரோன்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்து அறிக்கை விடுத்துள்ளது.