தென்கொரியாவைத் தொடர்ந்து....தடை விதித்த சீனா!!! எதற்காக இந்த தடை?

தென்கொரியாவைத் தொடர்ந்து....தடை விதித்த சீனா!!! எதற்காக இந்த தடை?

தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பானியர்களுக்கும் விசா வழங்குவதை சீனா நிறுத்தியுள்ளது. 

நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்:

சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு கடந்த மாதம் நீக்கியது.  இதன் காரணமாக அங்கு கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்தது. 

பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்:

இதனால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. 

தடை விதித்த சீனா:

இதனை பாரபட்சமான நடவடிக்கை என குற்றம் சாட்டிய சீனா, தென்கொரிய மக்களுக்கு சுற்றுலா மற்றும் வணிக விசா வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது. இந்த நிலையில், ஜப்பானியர்களுக்ககும் விசா வழங்குவதை நிறுத்துவதாக சீனா அறிவித்துள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  சேது சமுத்திரம் திட்டம் அமல்படுத்தப்படுமா? முதலமைச்சர் கூறுவதென்ன!!!