மூன்றாவது முறையாக மீண்டும் தோல்வியடைந்ததா ஆர்ட்டெமிஸ்?!!!

மூன்றாவது முறையாக மீண்டும் தோல்வியடைந்ததா ஆர்ட்டெமிஸ்?!!!

மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்காவின் திட்டம் எரிபொருள் கசிவால் மூன்றாவது முறையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியாக, அப்பல்லோ 17 திட்டத்திற்கு பிறகு ஆர்ட்டெமிஸ் திட்டத்தை நாசா செயல்படுத்தி வருகிறது. மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த விண்கலத்தை ஏவும் பணி ஏற்கனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. 

தற்போது மீண்டும் ஏவுவதற்கான 69 நிமிட கவுண்டவுன்  கடந்த நவம்பர் 14-ம் தேதி தொடங்கியது.  மோசமான வானிலை காரணமாக திட்டம் நிறுத்தப்பட்டது.  இந்த நிலையில், இன்று புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஆர்டெமிஸை 11 மணிக்கு விண்ணில் ஏவ நாசா திட்டமிட்டது. 

அதற்கான கவுன்ட்-டவுன் நடந்த போதிலும், எரிபொருள் கசிவை சரி செய்யும் பணியில் குழுவினர் ஈடுபட்டிருந்த நிலையில், சரி செய்ய இயலாததால் இறுதியாக திட்டம் மூன்றாவது முறையாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆர்டெமிஸ் விண்ணில் செல்வதை காண கடற்கரையில் குவிந்திருந்த ஏராளமான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.  

இதையும் படிக்க:  எம்.எல்.ஏக்கள் மீது இத்தனை பணமோசடி வழக்குகளா...விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!!!