எகிறி அடிக்கும் கொரோனா...அமெரிக்காவில் ஒரே நாளில் 5,57,425 பேருக்கு தொற்று உறுதி!
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,825 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,825 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா உலக மக்களையே வாட்டி வதைத்து வருகிறது. கொரோனா தொற்று தற்போது உருமாறி மக்களை சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது.கொரோனாவின் வீரியத்தை உணராத பொதுமக்கள் சிலர் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கியுள்ள நிலையில், ஓமிக்ரானும் பரவி வருகிறது.
உலக நாடுகளில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,107,624 ஆகவும், ஒரே நாளில் 6,323 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.உலக நாடுகளில் அதிகபட்சமாக அமெரிக்காவில் தான் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,57,425 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைதொடர்ந்து பிரான்சில் 271,8 பேருக்கும், இங்கிலாந்தில் 218,724 பேருக்கும் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.