சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்.. 1,383 பேருக்கு பாதிப்பு.. தடுப்பு நடவடிக்கை தீவிரம்

சீனாவில் மேலும் ஆயிரத்து 383 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவிப்பு செய்துள்ளது.

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்..  1,383 பேருக்கு பாதிப்பு.. தடுப்பு நடவடிக்கை தீவிரம்

வடகிழக்கு மாகாணமான ஜிலினில் 973 பேருக்கும் ஷாங்காயில் 311 பேருக்கும் ஷெஜியாங்  நகரில் 17 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் கொரோனா பரவுதல் சற்று அதிகரித்து இருப்பதால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  உலக நாடுகளில் தற்போது சீனா, கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில்  கொரோனா பரவுவதால் , எந்த நேரமும் விமானங்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு கொரோனா படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.