மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவலால் மீண்டும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு  இங்கிலாந்து தள்ளிவைத்துள்ளது. இந்த சூழலில், அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,135- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதிக்குப் பிறகு அந்நாட்டில் ஏற்படும் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.  இங்கிலாந்தில் நேற்று 11,625- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை கிட்டதட்ட 5 ஆயிரம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசியால் 14,000 -த்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு இருப்பதாகவும் தடுப்பூசி திட்டங்களுக்கான மந்திரி தெரிவித்துள்ளார்.