இலங்கையில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு...! இந்தியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி..!

இலங்கையில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு...! இந்தியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி..!

இலங்கைக்கு இந்தியாவில் இருந்து எரிபொருட்கள் இறக்குமதி ஆகி உள்ள நிலையில் அதனை பெற வாகன ஓட்டிகள் மீண்டும் நீண்ட வரிசைகளை ஏற்படுத்தி உள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பிரதமர் மாற்றப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் நிர்வாகத்துக்கு வந்துள்ளனர். ஆனால் இன்றும் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கிறது.

இதனால் இந்தியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பெட்ரோல் நிலையங்களில் மீண்டும் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.