சுப்ரீம் கோர்ட்டில் முதல் பெண் நீதிபதியான ஆயிஷா!!

வரலாற்று சாதனையாக சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை ஆயிஷா பெற்றுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் முதல் பெண் நீதிபதியான ஆயிஷா!!

பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.பாகிஸ்தானில் லாகூர் ஐகோர்ட் நீதிபதியாஜ இருந்த ஆயிஷா மாலிக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிப்பது குறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரிந்துரைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த பரிந்துரை சம்மதமாக பாகிஸ்தான் பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆயிஷா மாலிக் நீதிபதியாக நியமிக்கப்பட்டால் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட வேண்டும் என பார் கவுன்சிலின் தலைவரான லாதிஃப் அப்ரிடி மிரட்டல் விடுத்துள்ளார்.

நீதிபதி ஆயிஷா அவர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் 4 வது இடத்தில் உள்ளதால் சுப்ரீம் கோர்ட்டிற்கு அவரை முதலில் அனுப்புவது தவறானது என கருத்தை தெரிவித்து வந்த நிலையில் பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் அடிப்படையில் கூட்டத்தில் நீதிபதி ஆயிஷாவை சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக அமர்த்த ஒப்புதல் வழங்கியது.இதனை தொடர்ந்து முதல் பெண் நீதிபதி என்ற அங்கீகாரத்தை ஆயிஷா மாலிக் பெற்று பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறார்.