கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை!! ஒரு முழு தீவே அழிந்த சோகம்...3 பேர் பலி

கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் சுனாமி அலை ஏற்பட்டு  ஒரு தீவே முற்றிலும் அழிந்துள்ளது.

கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை!! ஒரு முழு தீவே அழிந்த சோகம்...3 பேர் பலி

பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடான டோங்கோ சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்டுள்ளது.  பல்வேறு தீவுகள் உள்ள இந்நாட்டில் சில தீவுகளில் எரிமலைகளும், அதிலும் சில எரிமலைகள் கடலுக்கு அடியிலும் அமைந்துள்ளது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை அமைந்துள்ளது. அந்த எரிமலையின் பெரும்பகுதி கடலுக்கு அடியில் தான் உள்ளது.

இந்நிலையில் அந்த தீவில் உள்ள அதுவும் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை கடந்த 15-ம் தேதி திடீரென வெடித்து சிதறியது. இதனால், கடலில் சுனாமி அலை ஏற்பட்டு டோங்கோ நாட்டின் பல்வேறு தீவுகளுக்குள் புகுந்தது. அவற்றில் குறிப்பாக, எரிமலைக்கு மிக அருகில் இருந்த தீவுகளான மங்கோ தீவு, ஃப்னொய்புவா தீவு, நமுகா தீவுகளில்  மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதில்  50 பேரை மட்டும் மக்கள் தொகையாக கொண்ட மங்கோ தீவு முற்றிலும் தரைமட்டமானது. 15 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகள் அந்த தீவில் உள்ள அனைத்து வீடுகளையும் அழித்து தரைமட்டமாக்கியது. அதுமட்டுமில்லாமல் ஃப்னொய்புவா என்ற தீவில் இரண்டு வீடுகள் தவிர எஞ்சிய வீடுகள் அனைத்தையும் தரைமட்டமாக்கியது.

இந்த எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக டோங்கோ அரசு தெரிவித்துள்ளது. பேரழிவிற்கு பிந்தைய பாதிப்பு தொடர்பாக டோங்கோ அரசு வெளியிட்ட முதல் தகவல் இதுவாகும். இதற்கிடையில் சுனாமி தாக்கிய பல்வேறு தீவுகள் தற்போது வெளி உலக தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், பேரழிவிற்கு பின்னர் உணவு, குடிநீருக்கு டோங்கோவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.