பிறந்து 3 வாரமே ஆன பச்சிளம் குழந்தை...உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் உயிரிழந்த அவலம்!!

கத்தாரில் பிறந்து 3 வாரமே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கி வருகிறது.

பிறந்து 3 வாரமே ஆன பச்சிளம் குழந்தை...உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் உயிரிழந்த அவலம்!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு கத்தாரில் பிறந்து 3 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தொற்றுக்கு பலியான குழந்தையை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தைக்கு  வேறு எந்தவிதமான மருத்துவ அறிகுறிகளும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரை கத்தாரில் கொரோனா தொற்று பாதித்து பலியாகும் இரண்டாவது குழந்தை இது என்று அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து யுனிசெப் அளித்த தகவலின்படி, உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்த 3. 5 மில்லியன் மக்களில்  0.4 சதவீதம் பேர் 20 வயதுக்குட்பட்டவர்கள். அதில், 9 வயது மற்றும் அதற்கு குறைவான வயதினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.