கொரோனா தடுப்பூசி செலுத்திய 3 பேர் பலி....

தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திய 3 பேர் பலி....

நியூசிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது அங்கு அமெரிக்க தயாரித்த பைசர் தடுப்பூசி பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூவர் இதய தசை வீக்கம் காரணமாக உயிரிழந்ததாக அந்நாட்டின் தடுப்பூசி கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தியவர்களில் 13 வயது சிறுவன் 26 வயது வாலிபர் மற்றும் 60 வயது முதியவர் என மூவர் உயிரிழந்து விட்டதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.