செல்ஃபி எடுத்துக் கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்...

செல்ஃபி எடுத்துக் கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்...

ராமநாதபுரம் | செல்ஃபி எடுத்துக் கொண்டே அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு தினசரி 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நேற்று காலை பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து முதுகுளத்தூருக்கு அரசு டவுன் பஸ் சென்றுள்ளது. அப்போது ஓட்டுநர் செல்பி எடுத்துக் கொண்டு பேருந்தை இயக்கியுள்ளார். பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் இதனை வீடியோவாக எடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூகவளைதலத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆபத்தை உணராமல் செல்பி எடுத்துக் கொண்டு பேருந்து இயக்கிய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க | மினிபேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் - வீடியோ வைரல்...