போதை ஆசாமியின் அட்டகாசம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

போதை ஆசாமியின் அட்டகாசம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும், நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் வெளியாகியுள்ளது. அதற்காக திரையரங்குகளுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதே சமயம் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, போதை ஆசாமிகளின் அட்டகாசங்களும் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது. 

சிவகாசி பேருந்து நிலைய வளாகத்தினுள் சர்தார் திரைப்படத்தின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதனை கண்ட போதை ஆசாமி ஒருவர் படத்தின் கதாநாயகி ராசிக்கண்ணாவை கண்டு, போதை தலைக்கேறிய நிலையில் மதி மயங்கினார். பின்னர் சுவரொட்டியில் இருந்த படத்தின் நாயகிக்கு மாறி மாறி முத்த மழை பொழிந்தார். இதனைக் கண்ட பள்ளி மாணவிகளும், பொதுமக்களும், சிரித்தபடியும், முகம் சுளிக்கும் படியும் இருந்தது.  

இந்த போதை ஆசாமி இப்படி இருக்க,மற்றொரு போதை ஆசாமி சிவகாசி பேருந்து நிலையம் முன்பு வாகனப் போக்குவரத்து நெரிசல் இருந்த சாலையின் நடுவே படுத்து கொண்டு அட்டகாசம் செய்தார். போலீசார் அவரை சமாதானப் படுத்தியதை கூட கண்டும் காணாமல், அவர் கால் மேல் கால் போட்டு படுத்து கிடந்ததை அப்பகுதியில் வாகனங்களில் சென்று வந்தவர்கள் பார்த்து முகம் சுளித்தபடி சென்றனர். இந்த இரண்டு போதை ஆசாமிகளின் செயல்பாடுகளும், இணையத்தில் வைரல் வீடியோவாக பரவி வருகிறது.