பயிற்சி முடிந்த மகிழ்ச்சியில் காவலர்கள்...! நடனமாடி கொண்டாடிய வீடியோ வைரல்...!

பயிற்சி முடிந்த மகிழ்ச்சியில் காவலர்கள்...! நடனமாடி கொண்டாடிய வீடியோ வைரல்...!

தமிழ்நாடு காவல்துறை மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி பெற்று வந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கு இன்று பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மணிமுத்தாறு பட்டாலியனில் கடந்த ஏழு மாதங்களாக பயிற்சி பெற்று வந்த சுமார் 295 காவலர்களுக்கு இன்று பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் காவலர்கள் உயரதிகாரிகளுக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் மணிமுத்தாறு பாட்டாலியன் பயிற்சி நிறைவு விழாவின் இறுதியில் காவலர்கள் உற்சாகமாக சினிமா பாடலை ஒலிக்கவிட்டு துள்ளி குதித்து நடனம் ஆடினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.தமிழகத்தில் சென்னை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் காவலர் பயிற்சி பள்ளி இருந்தாலும் கூட மணிமுத்தாறு பட்டாலியன் என்பது மாநில அளவில் புகழ்பெற்றதாக இருக்கிறது. அந்த அளவுக்கு மணிமுத்தாறில் காவலர்களுக்கு பயிற்சிகள் கடுமையாகவும், குறிப்பாக பிற பயிற்சி பள்ளிகளை காட்டிலும் இங்கு அதிக கட்டுப்பாடுகள் மற்றும் அதிக ஒழுங்கு நடவடிக்கைகள் கையாளப்படுகிறது என்றும்  கூறப்படுகிறது. எனவே தற்போது பயிற்சி முடித்துள்ள காவலர்கள் ஏழு மாதங்களில் குடும்பத்தினர், நண்பர்களை பிரிந்து மிகக் கடுமையான கட்டுப்பாட்டுடன் பயிற்சியை நிறைவு செய்திருப்பது இந்த கொண்டாட்ட நடனத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது.

இதையும் படிக்க : தீபாவளியை முன்னிட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பு.. திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் உற்சாகம்..!