கண்ணீர்விட்டு அழுத சிறுமிக்கு ரூ.29 லட்சம்…! தரமான சம்பவம்…!!

கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோற்றதால் கதறி அழுத சிறுமிக்காக, சுமார் 29 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

கண்ணீர்விட்டு அழுத சிறுமிக்கு ரூ.29 லட்சம்…! தரமான சம்பவம்…!!

கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோற்றதால் கதறி அழுத சிறுமிக்காக, சுமார் 29 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் லண்டனில் கடந்த 29 -ம் தேதி நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், பரம எதிரிகளான இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின. உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஆக்ரோஷமாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, 2 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது. போட்டியை நேரில் கண்ட ஜெர்மனியைச் சேர்ந்த சிறுமி, ஜெர்மன் அணி தோல்வி அடைந்ததால் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த காட்சி மைதானத்தில் உள்ள திரைகளிலும் ஒளிபரப்பானது. இதனை பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள், இணையத்தில் கிண்டல் செய்து பதிவிட்டனர்.

இதனிடையே, அந்த சிறுமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோயல் ஹுயுக்ஸ் என்பவர், ஆன்லைனில் நிதி திரட்ட ஆரம்பித்தார். இதன் மூலம் தற்போது வரை அந்த சிறுமிக்காக 29 லட்சம் ரூபாய் நிதி திரப்பட்டப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய ஜோயல் ஹுயுக்ஸ், இங்கிலாந்தில் உள்ளவர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல என்பதை அந்த சிறுமி தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.