மனைவியை கலாய்த்து பேசிய தொகுப்பாளர்....கன்னத்தில் ’பளார்’ என அறைந்த பிரபல நடிகர்! ஆஸ்கர் விழாவில் பரபரப்பு!!

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் தொகுப்பாளரை ’பளார்’ என அறைந்த ஹாலிவுட் நடிகரால் அரங்கமே அதிர்ச்சிகுள்ளாக்கியது.

மனைவியை கலாய்த்து பேசிய தொகுப்பாளர்....கன்னத்தில் ’பளார்’ என அறைந்த பிரபல நடிகர்! ஆஸ்கர் விழாவில் பரபரப்பு!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக தொகுப்பாளர் இன்றி நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோரால் தொகுத்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை நகைச்சுவையாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் இடையில் நடிகர் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார்.  

இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகையின் கணவரும் பிரபல ஹாலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையில் ஏறி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் பளாரென அறைந்துவிட்டு, பின் இருக்கை சென்று அமர்ந்த அவர்,  “என் மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து விலக்கிவிடு" என கூச்சலிட்டார். இவரின் செயல் விழா அரங்கையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இருப்பினும், ஆஸ்கார் விழாவில் பிங்கட் ஸ்மித் பற்றி ராக் கேலி செய்வது இது முதல் முறை அல்ல என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறிய நிலையில், நடிகர் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை தனது மனைவியை கேலி செய்ததற்காக மேடையில் அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.