தனியார் கல்லூரியில் போதையில் மிதக்கும் மாணவர்கள்...! இணையத்தில் வைரலான வீடியோ...!

கர்நாடக மாநிலம் சிவமொகாவில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் முன்பு, மாணவர்கள் போதையில் தள்ளாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

தனியார் கல்லூரியில் போதையில் மிதக்கும் மாணவர்கள்...! இணையத்தில் வைரலான வீடியோ...!

சிவமொக்காவில் உள்ள புகழ்பெற்ற தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் செய்த சேட்டைகளை சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

போதையில் மாணவர்கள் :

சிவமொக்கா சாகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா போதையில், கல்லூரியின் முன்பு செய்த அட்டகாசங்களை அந்தப் பகுதியில் சென்ற சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால், அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கடந்த சில நாட்களாக கஞ்சாவுக்கு அடிமையாகி கல்லூரியில் ரகளை செய்து வந்தனர். இந்த நிலையில் கஞ்சா போதைக்கு அடிமையாகிய சில மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தும் நடவடிக்கை எடுத்தது

கல்லூரி நிர்வாக அறிக்கை மற்றும் வைரலான வீடியோ : 

இந்த நிலையில் இன்று சில மாணவர்கள் கல்லூரி முன்பு கஞ்சா போதையில் தள்ளாடும் காட்சிகள் இணையத்தில் வெளியானது.  
பகலில் கஞ்சா போதையில்  மாணவர்கள் செய்த சேட்டைகளை அந்த பகுதியில் சென்றவர்கள் செல்போனில் படம்பிடித்தனர்.
மாணவர்கள் போதையில்தள்ளாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கஞ்சா போதையில் கல்லூரி முன்பு ரகளை செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.