மதவாத பித்தர்களை கைது செய்ய வேண்டும் - தொல். திருமாவளவன்

சனாதனத்தினை வேர் அறுத்து ஜனநாயகம் தழைக்க வேண்டும் என பேசியவர் சட்டமாமேதை அம்பேத்கர்

மதவாத பித்தர்களை கைது செய்ய வேண்டும் - தொல். திருமாவளவன்

அம்பேத்கரின் நினைவுநாளை கொண்டாடும் விதமாக  பல கட்சிகளும் பல இயக்கங்களும் போஸ்டர்கள் அடிப்பது வழக்கம். அதேபோல் இந்துமக்கள் கட்சியை  சார்ந்தவர்கள்  அம்பேத்கரின் 66வது நினைவு நாளை போற்றும் விதமாக   காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் ! என போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனை பலரும் எதிர்த்த நிலையில்  விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 திருமாவளவனின் ட்விட்டர் பதிவு 

சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை- தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10இலட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும் படிக்க |அண்ணல் அம்பேத்கருக்கு அரசியல் கட்சிகள் மரியாதை

சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என கோரிக்கை வைத்தார்.