மதவாத பித்தர்களை கைது செய்ய வேண்டும் - தொல். திருமாவளவன்
சனாதனத்தினை வேர் அறுத்து ஜனநாயகம் தழைக்க வேண்டும் என பேசியவர் சட்டமாமேதை அம்பேத்கர்
அம்பேத்கரின் நினைவுநாளை கொண்டாடும் விதமாக பல கட்சிகளும் பல இயக்கங்களும் போஸ்டர்கள் அடிப்பது வழக்கம். அதேபோல் இந்துமக்கள் கட்சியை சார்ந்தவர்கள் அம்பேத்கரின் 66வது நினைவு நாளை போற்றும் விதமாக காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் ! என போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனை பலரும் எதிர்த்த நிலையில் விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
திருமாவளவனின் ட்விட்டர் பதிவு
சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை- தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10இலட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.
மேலும் படிக்க |அண்ணல் அம்பேத்கருக்கு அரசியல் கட்சிகள் மரியாதை
சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என கோரிக்கை வைத்தார்.