பிஞ்சு குழந்தையை கொடூரமாக தாக்கும் தாய்- வீடியோ வைரல்

பச்சிளம் குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கிய கொடூர தாய் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். 

பிஞ்சு குழந்தையை கொடூரமாக தாக்கும் தாய்- வீடியோ வைரல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மனலப்பாடி பஞ்சாயத்துக்குட்பட்ட மோட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் வடிவழகன் இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தை சேர்ந்த துளசி(25) என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர். 

இதற்கிடையில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த கோவத்தை தனது இளைய மகன் 2 வயதான சிறுவனை துளசி கண்மூடி தனமாக அடித்து தாக்கி வந்துள்ளார். குழந்தையை அடிக்கும்போதெல்லாம் அதனை செல்போனில் வீடியோ எடுத்துக்கொள்வதும் துளசியின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் மனைவி துளசியின் செல்போனை எடுத்து பார்த்தபோது மகனை அவர் அடித்து தாக்கும் வீடியோக்கள் இருப்பதை பார்த்து வடிவழகன் பேரதிர்ச்சி அடைந்தார். உடனே மனைவியை ஆந்திராவில் உள்ள மாமனார் வீட்டுக்கு கூட்டிச் சென்று அங்கேயே விட்டுவிட்டு விழுப்புரத்துக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து குழந்தையின் தந்தைக்கு விவரம் தெரிந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் தற்போது அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், பச்சிளம் குழந்தையை, பெற்ற தாயே கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் துளசி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து துளசியை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார், ஆந்திரா சென்றுள்ளனர்.