கட்சி மறுசீரமைப்புக்கு மந்திரக்கோல்கள் தேவையில்லை - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி!

கட்சி மறுசீரமைப்புக்கு மந்திரக்கோல்கள் தேவையில்லை - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி!

காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய மந்திரக்கோல்கள் எதுவும் தேவை இல்லை என அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பல்வேறு முக்கிய கருத்துகளை கட்சி உறுப்பினர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது ஒழுக்கம், நிலையான கூட்டு முயற்சி மட்டுமே நமது உறுதியை வெளிப்படுத்தும் எனவும் கட்சிக்கு நமது கடனை முழுமையாக திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சுயவிமர்சனம் தேவை என்ற போதும் மன உறுதியை குலைக்கும் வகையில் அது இருக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.