அமெரிக்க நண்பனோடு ரோட்டுக் கடையில் உணவருந்திய அமைச்சர்...பழசை மறக்காத பிடிஆர்!!

தனது நண்பர்களுடன்  படித்த பள்ளியின் கேட் அருகில் பழமை வாய்ந்த  திராவிட உணவகம் சாப்பிடும் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க நண்பனோடு ரோட்டுக் கடையில் உணவருந்திய அமைச்சர்...பழசை மறக்காத பிடிஆர்!!

தமிழகத்தின் தற்போதைய நிதி அமைச்சராக பணியாற்றி வருபவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். குறுகிய காலத்திலே அதிரடி பேச்சுகளால்  சமூக வலைதளங்களில் வைரலாகி பிரபலமானவர். எதையும் வெளிப்படையாக பேசும் இவர், சில நேரங்களில் பதிவிடும் டீவிட் சர்ச்சைகளை கிளப்புவதும் உண்டு. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் இவர்தான் நிதி அமைச்சராக வருவார் என்று தேர்தலுக்கு முன்பே பேசப்பட்டது. பல உயர் படிப்புகளை படித்தவர் என்பதாலும் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பதாலும் நிதித்துறை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 பிடிஆர். இது ஒரு புறமிருக்க இவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்தபோதிலும் 'நான் பழசை எப்போதும் மறக்க மாட்டேன்' என்பதை நிரூபித்துள்ளார் அவர். பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்துள்ள பிடிஆரின் சொந்த ஊர் தூங்கா நகரம், கோவில் நகரம் என பல்வேறு சிறப்புகளை பெற்ற மதுரை ஆகும்.

மதுரை ஆரப்பாளையம் பொன்னகரத்தில் உள்ள பள்ளியில்தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார். இவர் படித்த பள்ளியின் கேட் அருகில் பழமை வாய்ந்த 'திராவிட உணவகம்' என்னும் சாலையோர ஹோட்டல் உள்ளது. பள்ளியில் படிக்கும் காலத்தில் பிடிஆர் மட்டுமின்றி சக மாணவர்களும் இந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்டுள்ளனர்

பின்பு காலங்கள் உருண்டோடினாலும், கட்சி பிரமுகர், எம்.எல்.ஏ, தற்போது அமைச்சர் என்று உயர் பதவிகள் வந்த போதிலும் திராவிட உணவகத்தை பிடிஆர் எப்போதும் மறப்பதில்லை. இந்த நிலையில் தனது பால்ய நண்பரான அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் ஆனந்த் செல்வா என்பவருடன் திராவிட உணவகத்தில் அமர்ந்து சாப்பிடும் படத்தை டுவிட்டரில் பிடிஆர் பகிந்துள்ளார்.


சில மாற்றம்... எங்கள் பள்ளியின் கேட் அருகே உள்ள திராவிட உணவகத்தில் Citi Global Consumer Bank சி.இ.ஓ ஆக இருக்கும் நண்பர் ஆனந்த் செல்வாவுடன்'' என்று டுவிட்டரில் கூறிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 1981-ம் ஆண்டு தான் படித்தபோது திராவிட உணவகத்தில் சாப்பிட்ட பசுமையான நினைவுகளையும் அசை போட்டுள்ளார். தான் மட்டுமல்லாது எவ்வளவு பெரிய வசதி படைத்த நண்பர்களாக இருந்தாலும் இந்த சாதாரணமான திராவிட உணவகத்தில் விருந்து கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் பிடிஆர். அவரின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர்.