அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாதது என்பதை விளக்கும் வைரல் வீடியோ!!!
aஅடிக்கொண்டிருந்த ஒரு நபர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் பிறந்தநாள் விழாவில் நடனமாடிய 48 வயது நபர் உயிரிழந்தார். இறந்தவர் பிரபாத் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், பரேலி இந்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தில் (IVRI) உதவி தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்தார்.
பிரபாத் நடனமாடுவதை விரும்புவதாகவும், பிரேம்நகரில் நடந்த ஒரு நண்பரின் பிறந்தநாள் விழாவில் தனக்குப் பிடித்த பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மனிதனே பூமியின் மிகக் கொடூரமான மிருகம்!!!- மனதை பதை பதைக்க வைக்கும் வைரல் வீடியோ!!!
பிரபாத்தின் நண்பர், அவர் நடனமாடும் போது மயங்கி விழுந்ததால், ஆடலின் ஒரு பகுதியாக இருக்குமோ என நினைத்து, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவராக இருந்த விருந்தினர்களில் ஒருவரால் CPR கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவர் விருந்தில் கலந்துகொள்வதற்கு முன்பு பேட்மிண்டனும் விளையாடியிருந்தார் எனத் தெரியவந்துள்ளது.
அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென தரையில் சரிந்தார். ஆரம்பத்தில் இது ப்ரான்காக மக்கள் நினைத்தனர். ஆனால் அவர் சிறிது நேரம் நகராமல் இருந்ததால், விருந்தில் இருந்த ஒரு மருத்துவரால் அவருக்கு உடனடியாக CPR வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | புதுமணத்தம்பதிக்கு போனில் வாழ்த்து சொன்ன நடிகர்!!! ஆசீர்வாதம் கேட்ட ஜோடி!!!
ஆனால், முதலுதவி பலனளிக்காததால், அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. டாக்டர்களின் கூற்றுப்படி, பிரபாத்துக்கு பெரிய மாரடைப்பு ஏற்பட்டது. இது இயற்கை மரணம் என்பதால் எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Shocking | உடம்பு என்பது உண்மையில் என்ன? கனவுகள் வாங்கும் பை தானே!!!
— Malaimurasu TV (@MalaimurasuTv) September 3, 2022
ஆடிய படியே உயிர் விட்ட நபரது கடைசி தருணங்கள்.#Malaimurasu #MalaimurasuViral #Viral #Bareilly #barely pic.twitter.com/K2MXbb1lKB