தைவான் பெண்ணை கரம் பிடித்த கிருஷ்ணகிரி இளைஞர்...!

தைவான் பெண்ணை கரம் பிடித்த கிருஷ்ணகிரி இளைஞர்...!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த ஆவத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஜப்பானில் உள்ள கொயோட்டோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் , அவருடன் பணிபுரியும் தைவானை சேர்ந்த சியாங் ஷியா ஜோன் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தங்கள் காதலை தங்கள் வீட்டில்  தெரிவித்தனர். பின்னர் இரு வீட்டாரும் அவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இவர்கள் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய ஜப்பானிலிருந்து காவேரிப்பட்டணம் வந்துள்ளனர். தொடர்ந்து இன்று காலை காவேரிப்பட்டணம் கோட்டை பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் நிர்வாகிகள்  முன்னிலையில் ராஜேந்திரன் - சியாங் ஷியா ஜோன் தம்பதிகள், உறவினர்கள் புடைசூழ திருமணம் செய்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.