நூலிழையில் உயிர் தப்பிய மாணவன்.. ஆயுள் கெட்டியைக் காட்டும் சிசிடிவி காட்சிகள்...
பூந்தொட்டியில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு, மாணவனை சீண்ட முயற்சி அலறியடித்து ஓடிய பள்ளி மாணவன், நூலிழையில் மாணவன் உயிர் தப்பிய CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் குந்நத்தூர் பகுதியில் பள்ளி மாணவன் ஒருவன் பாம்பிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பியது தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
மாணவன் வீட்டிற்குள் சென்ற போது, மதில் சுவரிலிருந்த பூச்சட்டியில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு ஒன்று, மாணவனை சீண்ட முயன்றது. இதை பார்த்த மாணவன் அலறியடித்துக் கொண்டு ஓடினான்.
மேலும் படிக்க | வடிவேலு காமெடி போல, ட்ரயல் வண்டியை அபேஸ் செய்த சம்பவம்...
சிறிது நேரத்திலேயே பாம்பு அங்கிருந்து வெளியேறி விட்டது. நல்ல பாம்பின் சீண்டலில் இருந்து நூலிழையில் மாணவன் தப்பிய சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க | பேருந்தின் மேல் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் இளைஞர்கள்...! வீடியோ வைரல்...!