2 குவாட்டர் அடிச்சும் ‘கிக்’ இல்ல... கவலையுடன் அமைச்சருக்கு கடிதம் எழுதிய ‘குடி’ மகன்!

போதிய மது அருந்தியும் போதை ஏறவில்லையே?

2 குவாட்டர் அடிச்சும் ‘கிக்’ இல்ல... கவலையுடன் அமைச்சருக்கு கடிதம் எழுதிய ‘குடி’ மகன்!

மதுபானம் அருந்தியும் கிக் கிடைக்கவில்லை என ‘குடி’ மகன் ஒருவர் மாநில அமைச்சருக்கு வருத்தத்துடன் புகார் கடிதம் எழுதிய ருசிகர சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த லோகேந்திர சோதியா என்பவர் தனியார் கார் பார்க்கிங் ஆபரேட்டராக உள்ளார். அண்மையில் குறிப்பிட்ட ஒரு மதுபான கடை மீது புகார் தெரிவித்து அம்மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதிய அவர், 2 குவாட்டர் குடித்தும் தனக்கு கிக் ஏறவில்லை எனவும்,  அந்த கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.