கூகுள் நிறுவனத்தில் ஐடி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்…இவ்வளவு சம்பளமா..!!

இந்திய ஐடி மாணவிக்கு  1.10 கோடி ரூபாய் சம்பளத்தில் கிடைத்த வேலை...

கூகுள் நிறுவனத்தில் ஐடி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்…இவ்வளவு சம்பளமா..!!

கூகுள் நிறுவனம் இந்திய ஐடி மாணவி ஒருவருக்கு  1.10 கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

பொதுவாக வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான டெக் நிறுவனங்கள் இந்திய ஐடி மாணவர்களுக்கு எப்போதும் அதிகச் சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் புவனேஸ்வர் ஐடி கல்வி நிலையத்தில் படித்த மாணவர் ஒருவருக்கு ஆன்லைன் டாக்ஸி சேவை மையமான “ஊபர்“ 2,74,250 டாலர் சம்பளத்துடன் வேலை வாய்ப்பை கொடுத்திருந்தது. இந்திய மதிப்பில் இது 2 கோடியைத் தாண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து  மிகப்பெரிய நிறுவனமான கூகுள் நிறுவனம் இந்திய ஐடி மாணவி ஒருவருக்கு  1.10 கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அதுவும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சையைத் தொடர்ந்து அடுத்தபடியாக இந்திய ஐடி மாணவி ஒருவருக்கு இவ்வளவு அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்கியிருப்பது ஒட்டுமொத்த இந்தியர்கள் மத்தியில் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாட்னாவை சேர்ந்த ஐடி மாணவியான சம்ப்ரீத்தி யாதவ், நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். கடந்த 2021 மே மாதம் டெல்லி டெக்னாலஜி கல்லூரியில் பிடெக் கம்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தார். பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர் தற்போது 44 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் நேர்காணலில் கலந்து கொண்ட சம்ப்ரீத்தி யாதவ் தற்போது ரூ.1.10 கோடி சம்பளத்துடன் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார். இது குறித்து சம்ப்ரீத்தியிடம் கேட்டப்போது 9 சுற்றுகள் கொண்டதாக இந்த நேர்காணல் இருந்தது என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த தகவல்  பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.