ராணுவ அதிகாரியிடம் ஆசி பெரும் சிறுமி; நெகிழ வைக்கும் வீடியோ வைரல்!

நின்றுக் கொண்டிருந்த ராணுவ வீரரின் காலை தொட்டு வணங்கிய சிறுமியின் செயல் இணையத்தில் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

ராணுவ அதிகாரியிடம் ஆசி பெரும் சிறுமி; நெகிழ வைக்கும் வீடியோ வைரல்!

ராணுவ வீரர்களுக்கான மரியாதையை நாம் அதிகமாகக் கொடுப்பதில்லை என்ற கவலை மக்கள் மனதில் எப்போது இருந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் இங்கு மகிழ்ச்சியாக இருக்க, நாட்டின் எல்லையில் மற்ற நாட்டு ராணுவத்தோடு உயிரைப் பணயம் வைத்து போராடி வரும் ராணுவ வீரர்களுக்கு, மனதில் ஒரு கோவிலைக் கட்டினால் கூட மிகையாகாது.

இந்த நிலையில், ஒரு வீடியோ இணையத்தளங்களில் படு வைரலாகி, மனதை நெகிழ வைக்கிறது. ஒரு மெட்ரோ ஸ்டேஷனில், ஓரமாக நின்று கொண்டிருந்த ராணுவ அதிகரிகளிடம் சென்ற சிறுமி ஒருவர், அவரது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதைப் பார்த்ததும் நெகிழ்ந்த ராணுவ வீரர், அந்த சிறுமியை உச்சி முகர்ந்து நன்றி கூறினார்.

இந்த நெகிழ வைக்கும் வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட எம்பி பிசி மோஹன், “தேசப் பற்றொடு சிறு குழந்தைகளை வளர்க்கும் கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. இது தான் ஒரு சிறந்த தேசத்தை உருவாக்கத் தேவையான திறவுகோல். ஜெய் ஹிந்த்” என பதிவிட்டு, பெருமைப் பட்டார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், அந்த வீடியோவில் இருந்து சிறுமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, வாழ்த்துகளையும் த்ரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நெகிழ வைக்கும் சம்பவம், இணையத்தில் படு வைரலாகி வருகிறது.