மகனுக்கு பொருத்தப்பட்ட தந்தையின் சிறுகுடல்!! நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!!

அறுவை சிகிச்சையின் மூலம் தந்தையின் சிறுகுடலை வெட்டி எடுத்து மகனுக்கு பொருத்தி சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர்.

மகனுக்கு பொருத்தப்பட்ட தந்தையின் சிறுகுடல்!! நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!!

பெங்களூருவை சேர்ந்தவரான சுவாமிநாதன் இவரது மனைவி சாவித்திரி இவர்கள் இருவருக்கும் 4 வயதான மகன் உள்ளான்.இவர்களின் மகனான குகனிற்கு சிறுவயது முதல் சிறுகுடலில் முறுக்கம் பிரச்சனை இருந்து வந்துள்ளது.இதன் விளைவு பெரிதாக ஆரம்பித்த நிலையில் சிறுவனை அவர்களது பெற்றோர்கள் சென்னையில் உள்ளா ரெலா மருத்துவமனையில் அனுமதித்ததாக சொல்லப்படுகிறது.சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சை செய்தல் வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பெற்றோர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை குறித்து அவர்களிடம் தெரிவித்துள்ளனர். தந்தைக்கும் மகனுக்கும் ஒரே வகையான இரத்த பிரிவு என அறிந்த மருத்துவர்கள் சிறுவனின் தந்தையான சுவாமிநாதனை அழைத்து சென்று சில முடிவுகளை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

மருத்துவர்கள் சிறுவனின் தந்தையிடம் சிறுகுடலின் ஒரு பகுதியினை வெட்டி எடுத்து தங்களது மகனுக்கு பொருத்த உள்ளதாக தெரிவித்தனர்.இதற்கு சிறுவனின் தந்தையானவர் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.இதையடுத்து அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில் சுவாமிநாதனின் சிறுகுடலில் சுமார் 150 செ.மீ நீளமுள்ள பகுதியினை மட்டும் வெட்டி எடுத்து சிறுவனுக்கு பொருத்துவதாக முடிவு செய்தனர்.

இந்த சிகிச்சையானது சுமார் 7 மணி நேரம் நடைபெற்றதாகவும் மேலும் இந்த அறுவை சிகிச்சை வெற்றியில் நிறைவடைந்ததாக கூறப்பட்டது.தற்போது சிகிச்சைக்கு பின் தந்தை மற்றும் மகன் இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.