முன்னாள் பிரதமர் நேரு குறித்து விமர்சனம் - பதிலடி கொடுத்த திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா!

முன்னாள் பிரதமர் நேரு குறித்து விமர்சனம் - பதிலடி கொடுத்த திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா!

நேருவால் செய்ய முடியாததை தற்போதைய அரசு செய்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மத்திய அரசின் வாதத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

தேசத்துரோக சட்டத்தை எதிர்த்து மஹுவா மற்றும் பலர் தொடர்ந்த வழக்கு ஒன்றாக விசாரணைக்கு வந்த போது, இக்கருத்தை சொலிசிட்டர் துஷார் மேத்தா முன்வைத்தார்.

இந்நிலையில் நீங்கள் சொல்வது சரிதான் என டுவிட்டரில் பதிவிட்டுள்ள மஹுவா, நேருவால் நீதிமன்றத்தில் பொய் சொல்லவோ, மக்களை உளவு பார்க்கவோ, அப்பாவிகளை கைது செய்யவோ முடியவில்லைதான் என குறிப்பிட்டுள்ளார்.