திருமணத்துக்கு வந்தீங்களா..இல்ல..! அப்போ இத பண்ணுங்க..என்னடா இது புதுசா இருக்கு..

திருமணத்துக்கு வந்தீங்களா..இல்ல..! அப்போ  இத பண்ணுங்க..என்னடா இது புதுசா இருக்கு..

திருமணம் என்றாலே உறவுகள் கூடி வாழ்த்துவது என்ற  நிலை மாறி தற்போது ஆடல், பாடல், உணவு, அலங்காரம், என அனைத்தும் பணமயமாக மாறிவிட்டது.

நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடத்துவது தற்போது பேஷனாகிவிட்ட நிலையில் விருந்தினர்கள் வரார்களோ இல்லையோ, சாப்பாடு சாப்பிடுகிறார்களோ இல்லையோ பணத்தை எண்ணி வைக்க வேண்டும்.

இதனாலேயே விருந்தினர்களை பார்த்து பார்த்து அழைப்பர் திருமண வீட்டார். இந்த நிலையில் அழைக்கப்பட்ட விருந்தினர் வராததால் நான் ஏன் தண்டத்துக்கு பணம் கட்ட வேண்டும் என எண்ணிய திருமண வீட்டார்.

அவர்களுக்கான உணவு செலவை அவர்களே செலுத்தட்டும் என அதற்காக பில்லை அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த சுவாரஸ்ய சம்பவம் சிகாக்கோவில்தான் நடந்தேறியுள்ளது.