கொட்டி தீர்த்த மழை- குதுகலத்துடன் குளித்து மகிழ்ந்த கோவில் யானைகள்

திருச்சியில் கொட்டி தீர்த்த மழையில் கோவில் யானைகள் நனைந்தபடி உல்லாசமாக குளித்து மகிழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொட்டி தீர்த்த மழை- குதுகலத்துடன் குளித்து மகிழ்ந்த கோவில் யானைகள்

திருச்சியில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நள்ளிரவு முதல் காலை  வரை நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக அடை மழை பெய்யது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்த இந்த மழை இதமான சூழலை ஏற்படுத்தியது. 

மழை ஏற்படுத்தும் மகிழ்ச்சி மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பேரானந்தம் தான்.

அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் உள்ள ஆண்டாள் மற்றும் அழகர் யானைகள் இன்று காலை கொட்டி தீர்த்த மழையில் நனைந்தபடி உல்லாசமாக குளியல் போட்டன. யானைகள் ஆரவாரத்தோடு குளிக்கும் காட்சியை கோயிலில் இருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.