வீட்டுக்கு மூத்த பிள்ளை...தேங்காய் நார் உரித்து கொடுத்து உதவி செய்யும் நாய்!!

வீட்டிற்கு சமையலுக்கு தேவையான தேங்காயை சர்வ சாதாரணமாக உரிக்கும் நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீட்டுக்கு  மூத்த பிள்ளை...தேங்காய் நார் உரித்து கொடுத்து உதவி செய்யும் நாய்!!

பொதுவாக நாய்களை கண்டாலே சிறு வயது முதல் பெரியவர்கள் வரை நாயின் கடிக்கு பயந்து தலைதெறிக்க ஓடுவார்கள். ஆனால், இங்கோ குடும்பத்தினரை உற்சாகப்படுத்தும் வகையில் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று தேங்காய் உரிக்கும் வீடியோ ஆச்சரியப்படவைக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அண்ணாநகர் பகுதியில் இலவரசன் என்பவர் தனது மனைவி, மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில்  ஜானி என்ற நாயை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வருகின்றனர். ஜானி அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கூறும் அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக கூறுகின்றனர்.

அந்தவகையில்,  தினசரி காலையில் வீட்டில் சமையலுக்கு பயன்படும் தேங்காய்களை தாமாக முன்வந்து வாயால் கடித்து அதனை உரித்து வருவதாகவும் கூறுகின்றனர்.  மேலும் ஜானியின் உரிமையாளர் இலவரசன் கூறும் அனைத்து வார்த்தைகளுக்கும் கட்டுப்பட்டு செயல்படுவதாகவும் கூறினார்.

அதேபோல் பகல்நேரம் மட்டுமின்றி இரவு நேரத்திலும் இளவரசன் வீட்டை சுற்றி வரும் செல்லப்பிராணி ஜானி தெருவில் நடந்து செல்லும் நபர்களை அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், நாயின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.