நாய்க்கு பிரமாண்டமாக பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள்..!

கொத்தாக 3 பேரையும் பிடித்து சிறையில் அடைத்த போலீசார்..!

நாய்க்கு பிரமாண்டமாக பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள்..!

குஜராத்தின் அகமதாபாத் நகரில் மதுவன் கிரீன் பார்ட்டி பகுதியில் வசிப்பவர் சிராக் என்ற டேகோ பட்டேல். இவரது சகோதரர் ஊர்விஷ் பட்டேல். இவர்கள் இருவரும் நண்பர் திவ்யேஷ் மெஹாரியாவுடன் இணைந்து கடந்த 7ஆம் தேதி இரவு தங்களுடைய அபி என்ற செல்ல நாயின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

அந்தக் கொண்டாட்டத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என பலர் கலந்துகொண்டனர். ஆனால் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற எந்த கொரோனா விதிமுறையும் அங்கு பின்பற்றப்படவில்லை.துதவிர, பிரபல நாட்டுப்புற பாடகர் ஒருவரையும் வரவழைத்து, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்தத் தகவல் காவல் துறையினருக்கு செல்ல, சம்பவ இடத்திற்கு சென்று தொற்று நோய்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.