பல பயனர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கம்...கடும் அதிருப்தியில் பயனாளர்கள்!

பல பயனர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கம்...கடும் அதிருப்தியில் பயனாளர்கள்!

Published on

இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல பயனர்களின் டுவிட்டர் கணக்குகள் முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட எலான் மஸ்க்:

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

50 சதவீத ஊழியர்களை நீக்கம்:

அதன் ஒரு பகுதியாக இன்று 50 சதவீத ஊழியர்களை நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் கணக்குகள் முடக்கம்:

இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள சில பயனர்களின் ட்விட்டர் கணக்குகள் முடங்கியுள்ளன. பலரின் ட்விட்டர் பக்கம் செயலிழந்துள்ளதால், பயனாளர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com