தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம் துவக்கம்,.! அமைச்சர் அறிவிப்பு.! 

தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம் துவக்கம்,.! அமைச்சர் அறிவிப்பு.! 
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம் துவங்கப்படவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசுப்படுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்ய வசதியாக 'தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை - 2019' ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 2030 வரை மாநில ஜி.எஸ்.டி. வரி 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும், இத்தகைய நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும்போது 100 சதவீத முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும், 100 சதவீதம் மின்சார வரி விலக்கு அளிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. 

ஓலா நிறுவனம் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை கிருஷ்ணகிரியில் அமைக்கவுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அமையவுள்ள இந்த தொழிற்சாலை மூலம்  நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாகவும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இந்த ஆலையில் இரு சக்கர வாகனத்துக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களும் தயாரிக்கவுள்ளதாகவும்,3,000 ரோபோக்கள் வாகன தயாரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளதாகவும், இதன் மூலம் 2 விநாடிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com