கொரோனா நிவாரணப் பணிக்கு ரூ. 2 கோடி நிதி... லைகா புரொடக்சன்ஸ் வழங்கியது...

கொரோனா நிவாரணப் பணிக்காக ரூபாய் 2 கோடி நிதியை லைகா புரொடக்சன்ஸ் இன்று முதலமைச்சரிடம் வழங்கியது.

கொரோனா நிவாரணப் பணிக்கு ரூ. 2 கோடி நிதி... லைகா புரொடக்சன்ஸ் வழங்கியது...
கொரோனா 2ஆவது அலையில் சிக்கித் தவித்து வரும் தமிழகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுக்கோளுக்கிணங்க பலரும் கொரோனா நிவாரண பணிக்காக நிதி உதவியை அளித்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ரூபாய் 2 கோடியை கொரோனா நிவாரண பணிக்காக வழங்கியுள்ளது.
லைகா புரோடக்சன்ஸ் அல்லிராஜா சுபாஸ்கரனின்  சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 2 கோடிக்கான காசோலையை லைகா நிர்வாகி ஜிகேஎம் தமிழ்குமரன், நிருதன் மற்றும் கெளரவ் வழங்கினர்.