சமூக பாதுகாப்புத் திட்டங்களை நிறுத்தம்…பி.டி.ஆர்க்கு உதயகுமார் பதிலடி!

52 லட்சம் மாணவர்கள் மடிக்கணினி வழங்கப்பட்டது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்புத் திட்டங்களை நிறுத்தம்…பி.டி.ஆர்க்கு உதயகுமார் பதிலடி!

பொருளாதாரம் குறித்து நிதி அமைச்சர் கூறியது  தமிழ்நாட்டில் விவாத பொருளாக மாறியுள்ளது. வருவாய் பற்றாக்குறையை இருமடங்காக குறைத்ததாக அவர் கூறியுள்ளார்.

வரி உயர்வு

வருவாய் பற்றாக்குறை எப்படி குறைக்கப்பட்டது, வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு குடிநீர் வரி உயர்வு, சாக்கடை வரிஉயர்வு எல்லாம் உயர்த்தி விட்டு இதையெல்லாம் கடந்த 20 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்று சலிப்புடன் நிதி அமைச்சர் கூறுகிறார். சமூக பாதுகாப்பு திட்டங்களை நிறுத்தியதை  நியாயத்தையும் வகையில்கடந்த நிதியாண்டில் 4.61 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை தற்பொழுது 3.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று பேசி உள்ளார்.

தாலிக்குத் தங்கம் நிறுத்தம்

பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டவிட்டது. 52 லட்சம் மாணவர்கள் மடிக்கணினி வழங்கப்பட்டது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய தொகை 2 லட்சம் நபர்களுக்கு குறைப்புஅம்மா மினி கிளினிக், அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம் போன்ற சமூக  பாதுகாப்பு திட்டங்களை ரத்து செய்துவிட்டு, நிதி பற்றாக்குறை குறைந்தது விட்டது என்று நிதி அமைச்சர் கூறுவது சுவாசிக்கும் காற்றை நிறுத்திவிட்டு நான் காற்றை மிச்சபடுத்தி விட்டேன் என்ற கருத்து போல் உள்ளது.

மக்கள் வாழ்நிலை தெரியுமா?

பொருளாதாரம் படித்தவருக்கு மக்கள் வாழ்க்கை பற்றி தெரியுமா, ஒரு மனிதனுக்கு தேவை உணவு, உடை, இருப்பிடமாகும். கடந்த 15   மாத காலத்தில் நிதி அமைச்சர் எத்தனை புதிய திட்டங்கள், மக்களுக்கு வாழ்வாதார திட்டங்கள், மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள், கல்வி திட்டங்கள், வேலை வாய்ப்பு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் என்பதை பட்டியலிட்டு சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஜெயலலிதா தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி 8 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் தோறும் அரிசி திட்டத்தை தந்தார்கள். அத்திட்டத்தினை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கடைசி வரை கொண்டு சென்றார். தாலிக்கு தங்கம் திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் கடைசி வரை வழங்கப்பட்டது.

அமைச்சரின் சர்வாதிகார போக்கு 

வருவாய் பற்றாக்குறை குறித்து அமைச்சர் விளக்கம் கொடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது. இது சர்வாதிகார போக்கு என்று. சொத்து வரி, மின்சார வரி, சாக்கடை வரியை உயர்த்தி விட்டு சர்வாதிகார போக்குடன் பதில் கூறுவதா? சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் தொடங்கி வைக்கும் போது அதுக்கு பொருளாதாரத்தை காரணம் காட்டினர், ஆனால் பிச்சை எடுத்தாவது திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று எம்.ஜி.ராமச்சந்திரன் கூறினார்.

தற்போது அந்த திட்டத்தால் கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்தன. கடந்த தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் 525 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கேஸ் மானியம் 100 ரூபாய், பெட்ரோல் டீசல் விலை குறைப்போம் என்று கூறினார். ஆனால் இதுவரை எதுவும் செய்யவில்லை, ஆனால் நிதி அமைச்சர் சமூக பாதுகாப்புத் திட்டத்தை நிறுத்தியது வேதனையும், கண்ணீரும் மக்களுக்கு வருகிறது என்று கூறினார்.