மீன் பிடிக்க சென்ற போது பரிதாபம்... 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு...

கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்

மீன் பிடிக்க சென்ற போது பரிதாபம்... 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு...

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காரனோடை கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரனோடை பகுதியைச் சேர்ந்த ரஹமத், அர்ஜுன், சத்யா ஆகிய 3 சிறுவர்களும் கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடிக்கப்போவதாக கூறி சென்றுள்ளனர்.

ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர், ஓடைக்கு சென்று பார்த்த போது, சிறுவர்களின் உடைகள் மட்டுமே கரையில் கிடந்துள்ளன.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் தேடி,  3 சிறுவர்களையும் சடலங்களாக மீட்டனர். மேலும், சிறுவர்களின் உடலை மீட்ட போலிசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.