ப்பா.. இதுதான் ஜனநாயக கடமை.. வாக்களிக்க மும்பையில் இருந்து கோவை வந்த பெண்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றர்,

ப்பா.. இதுதான் ஜனநாயக கடமை.. வாக்களிக்க மும்பையில் இருந்து கோவை வந்த பெண்

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது . இந்நிலையில், மும்பையில் இருந்து விமானம் மூலம் பெண் கோவை வந்து வாக்களித்த சம்பவம் நடந்துள்ளது.. 

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி ரோசல்.. இவர் தனது குடும்பத்துடன் மும்பையில்  வசித்து வருகிறார்.  தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆண்டனி ரோசல் மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்துள்ளார். அவர், தனது குழந்தையுடன் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார்.