சென்னையில் ஒரே நாளில் 31 ஆயிரத்து 143 பேருக்கு தடுப்பூசி...

சென்னையில் ஒரே நாளில் 31 ஆயிரத்து 143 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 31 ஆயிரத்து 143 பேருக்கு தடுப்பூசி...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஒரே நாளில் 31 ஆயிரத்து 143 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
அதில் 18 ஆயிரத்து 772 நபர்கள் 18 முதல் 44 வயதினருக்கு உட்பட்டவர் என்றும், மற்ற வயதுடையவர்கள் 12 ஆயிரத்து 371 நபர்கள் எனவும் கூறியுள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மூவாயிரத்து 800 நபர்களுக்கும், ராயபுரம் மண்டலத்தில் மூவாயிரத்து 426 நபர்களுக்கும் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 24 லட்சத்து 30 ஆயிரத்து 381 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.