மாணவிகளை மூளை சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்ற ஆசிரியை தீபா தலைமறைவு,.!

மாணவிகளை மூளை சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்ற ஆசிரியை தீபா தலைமறைவு,.!

சுஷில் ஹரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பெண் ஆசிரியை தீபா தலைமறைவு

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறியிருந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ. டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். 

மேலும் சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்ததாக பாரதி மற்றும் தீபா ஆசிரியர்கள் மீது சிபிசிஐ டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாரதி தற்போது வெளிநாட் டில் இருக்கிறார் தீபாவை நேற்று பி டிக்கச் சென்றபோது அவர் தலைமறைவாகி உள்ளார். தீபாவை பி டிப்பதற்கு சிபிசிஐ டி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தே டி வருகின்றனர்