சுப்பிரமணிய சாமியின் உருவப் படத்தை செருப்பால் அடித்து தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டம்...

சுப்பிரமணிய சாமியின் உருவப் படத்தை செருப்பால் அடித்து தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டம்...

சுப்பிரமணிய சாமியின் உருவப் படத்தை செருப்பால் அடித்தும், கிழித்தும் தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என்றும் ஜெர்மனியின் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது என்றும் ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார்.மேலும் நேற்று காலை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 2019ம் ஆண்டுக்கு முந்தைய காஷ்மீர் வகை தேசிய எதிர்ப்பு எழுச்சியின் அச்சுறுத்தலில் தமிழகம் இன்று உள்ளது. தமிழக முதல்வர் இது தொடர்பாக ரா அமைப்பு, உளவுத் துறைக்கு ஆவணம் வழங்க வேண்டும் என்றும்,

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு பதிலாக, மத்திய அரசு சி.ஆர்.பி. எஃப் மற்றும் பி.எஸ்.எஃப் மத்திய படைகளை மதுரைக்கு அருகிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பன்கவுண்டன் புதூரில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் அவரது திருவுருவப் படத்தை செருப்பால் அடித்து கிழித்து கண்டனத்தை வெளிப்படுத்தினர்.