சுகாதார ஆய்வாளரை கைது செய்ய வேண்டுமென சாலை மறியல்!

சுகாதார ஆய்வாளரை கைது செய்ய வேண்டுமென சாலை மறியல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக சுப்பையா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூய்மை பணியாளராக இருக்கும் ஜோசப் ஹென்றி என்பவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று மூஞ்சிக்கல் பகுதியில் தமிழ்ப் புலிகள் மற்றும் ஆதித்தமிழர் கட்சியினர் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவருடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.