பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் பாலியல் வழக்கில் கைது.! இந்த பிரிவில் கைது செய்தால் அவ்வளவு தான்.! 

பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் பாலியல் வழக்கில் கைது.! இந்த பிரிவில் கைது செய்தால் அவ்வளவு தான்.! 

சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால், இவர் சென்னையில் புகழ்பெற்ற பி.எஸ்.பி. பி என்று அழைக்கப்படும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  இணைய வழி வகுப்பின் போது இடுப்பில் துண்டுடன் அருவருக்கத்தக்க வகையில் மாணவர்கள் முன்னிலையில் தோன்றிதாகவும்,  அவ்ர்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதே பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டம் பிரிவு 12 இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் இந்தப் பிரிவானது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவாகும்

போக்சோ சட்டத்தில் பன்னிரண்டாவது பிரிவின்படி 18 வயது கீழுள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல்,  தவறான நோக்கத்துடன் தொடுதல், அல்லது அவர்களை பின் தொடர்தல்,  அந்தரங்கத்தை வெளிப்பபட வைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் எல்லாம் இந்தப் பிரிவின் கீழ் அடங்கும்